×

காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம்

ரெட்டியார்சத்திரம், ஏப்.28: ரெட்டியார்சத்திரம் வேளாண்மை துறை சார்பில் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியிலிருந்து அகிலேஷ், பாலசூர்யா, தினேஷ், ஜெயக்குமார், கிஷோர், சஃபியுல்லாஹ், ரகு, சாம், சிவகுரு, விகாஷ் என 10 மாணவர்கள் ரெட்டியார்சத்திரம் வட்டத்தில் கிராம தங்கல் திட்டம் சார்பாக களப்பணி ஆற்ற வந்தனர். அவர்கள், கன்னிவாடி அருகே கசவணம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்விற்கு வாணவராயர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஹரிஷங்கர் தலைமை தாங்கினார். கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Redyarchatram ,Akhilesh ,Balasurya ,Dinesh ,Jayakumar ,Kishore ,Safiullah ,Raghu ,Sam ,Sivaguru ,Vikash ,Pollachi Vanavarayar Agricultural College ,Redyarchatram Department of Agriculture ,Village Dangal Project ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற...